ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரையிலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான இவர், தற்போது ரங்கா மார்த்தாண்டா என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஒடிடியில் ரிலீஸாக இருக்கிறது. இதற்காக தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கோ அல்லது படத்தின் கதை சொல்லியாகவோ குரல் கொடுப்பதற்கு நடிகர் சிரஞ்சீவியிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கி வைத்திருந்தார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதை தொடர்ந்து அவர் ஒய்வு எடுத்து வருவதால் அவரை டப்பிங் பேச அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்துள்ளார் கிருஷ்ண வம்சி.. ஆனால் சிரஞ்சீவி தானாகவே அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தியதோடு சொன்னபடி வந்து டப்பிங்கு பேசி கொடுத்துள்ளார். அன்னைய்யாவின் அன்புக்கு ஈடு இல்லை என சிரஞ்சீவியின் இந்த செயல் பற்றி சோஷியல் மீடியாவில் உருகியுள்ளார் கிருஷ்ண வம்சி.