கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 'குபேரா'. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தெலுங்கு சீனியர் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், “குபேரா படத்தில் தனுஷைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரால் மட்டுமே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நியாயம் சேர்க்க முடியும். அந்தக் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு நடித்திருந்தார். படத்தில் திருப்பதி காட்சியில் பார்த்த போது எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் அவரது நடிப்பில் உள்ளது. அப்படி இல்லையென்றால் அந்த விருதுகள் அதன் அர்த்தத்தை இழந்துவிடும். நீங்கள் ரொம்பவே ஈடுபாட்டுடன் நடிக்கிறீர்கள் தனுஷ். உங்கள் அர்ப்பணிப்பு தெரிகிறது.,” என்று பாராட்டிப் பேசினார்.
மேலும், நாகார்ஜுனா, ராஷ்மிகா, தேவிஸ்ரீ பிரசாத், இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரைப் பற்றியும் தனித்தனியே மிகவும் பாராட்டினார். முன்னதாக விழாவுக்கு வந்த சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் தனுஷ். அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் சிரஞ்சீவி.
'குபேரா' படம் மூன்று நாட்களில் 75 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.