பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் |

தமிழ் கலாசாரத்தில் அண்ணி உறவிற்கு தனி மவுசு உண்டு. அண்ணன் மனைவி என்றாலும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணி, இன்னொரு அன்னை என்பார்கள். 1950களுக்கு முன்பு வந்த சமூக திரைப்படங்களில் அண்ணி உறவு அவ்வப்போது சில காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. புராண படங்களில் சீதை, லட்சுமணனுக்கு அண்ணி என்பதால் அதுகுறித்த காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அண்ணி என்ற உறவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவான முதல் படம் 'அண்ணி'. தன் கணவரின் கடைசி தம்பியை, பெற்ற மகன் போல் பாதுகாத்து வளர்க்கும் ஒரு அண்ணி சந்திக்கும் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்தான் கதை. அண்ணியாக ஜி.வரலட்சுமி நடித்தார், தம்பி என்கிற சிறுவனாக மாஸ்டர் சேது நடித்தார். இவர்கள் தவிர காந்தாராவ், சுந்தராவ், அன்னபூர்ணா கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.எஸ்.பிரகாஷ் ராவ் தயாரித்து, இயக்கினார், பெண்டியாலா இசை அமைத்திருந்தார். தெலுங்கு கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் தமிழிலும் தயாரானது. ஆனால் தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னாளில் இதே பெயரில் தமிழில் பல படங்கள் வந்தது, 'அண்ணி' என்கிற தொலைக்காட்சி தொடரும் மிகவும் பிரபலமானது.