சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தமிழ் கலாசாரத்தில் அண்ணி உறவிற்கு தனி மவுசு உண்டு. அண்ணன் மனைவி என்றாலும் ஒவ்வொரு தம்பிக்கும் அண்ணி, இன்னொரு அன்னை என்பார்கள். 1950களுக்கு முன்பு வந்த சமூக திரைப்படங்களில் அண்ணி உறவு அவ்வப்போது சில காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. புராண படங்களில் சீதை, லட்சுமணனுக்கு அண்ணி என்பதால் அதுகுறித்த காட்சிகள் நிறைய வந்திருக்கிறது.
அண்ணி என்ற உறவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு உருவான முதல் படம் 'அண்ணி'. தன் கணவரின் கடைசி தம்பியை, பெற்ற மகன் போல் பாதுகாத்து வளர்க்கும் ஒரு அண்ணி சந்திக்கும் உறவும், பிரிவும், இன்பமும், துன்பமும்தான் கதை. அண்ணியாக ஜி.வரலட்சுமி நடித்தார், தம்பி என்கிற சிறுவனாக மாஸ்டர் சேது நடித்தார். இவர்கள் தவிர காந்தாராவ், சுந்தராவ், அன்னபூர்ணா கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கே.எஸ்.பிரகாஷ் ராவ் தயாரித்து, இயக்கினார், பெண்டியாலா இசை அமைத்திருந்தார். தெலுங்கு கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் தமிழிலும் தயாரானது. ஆனால் தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னாளில் இதே பெயரில் தமிழில் பல படங்கள் வந்தது, 'அண்ணி' என்கிற தொலைக்காட்சி தொடரும் மிகவும் பிரபலமானது.