ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா |
சில காலம் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவிஎம் நிறுவனம், பாரதிராஜா வருகையை தொடர்ந்து அவரது அணியை சேர்ந்தவர்களின் படங்களை ஆர்வமுடன் தயாரித்தது. பாரதிராஜவுடன் 'புதுமைப் பெண்', பாக்யராஜூடன் 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட படங்களை தயாரித்தது. அவைகள் பெரும் வெற்றி பெற்று வசூலையும் அள்ளிக் கொடுத்தது.
அந்த வரிசையில் அப்போது சில வெற்றிப் படங்களை இயக்கிய கங்கை அமரனை வைத்து ஒரு படத்தை தயாரித்தது. அந்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'. இந்த படத்தில் விஜயகாந்த் நாயகனாகவும், ஊர்வசி நாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் சுஜாதா, சுரேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு, ஜெய்சங்கர், நளினி, சில்க் ஸ்மிதா, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு ஏதோ அழகான கதை என்று தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு ஏமாற்றம். அது ஒரு வழக்கமான பழிவாங்கும் படமாக இருந்தது. அப்போது இந்தி மற்றும் ஆங்கில படங்களில் வந்திருந்த காட்சிகளை காப்பி அடித்து பல காட்சிகளை வைத்திருந்தார் கங்கை அமரன். இளையராஜாவின் பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.