அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

'உத்தமப்புத்திரன்' படத்தில் 'ஹா... யாரடி நீ மோகினி' , மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்', 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' இந்த பாடல்களை யார் பாடியது என்று கேட்டால் 90 சதவிகிதம் பேர் பி.சுசீலா என்பார்கள், அல்லது வேறு பாடகியின் பெயரை சொல்வார்கள். பத்து சதவிகிதம் பேருக்குத்தான் பாடியது ஏ.பி.கோமளா என்பது தெரியும்.
1940களின் இறுதியில் ஆரம்பித்து 1970வரை கோமளாவின் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய மொழிகளில் ஒலித்தது. தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடி வந்த கோமளாவிற்கு 1949ம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்தில் இடம்பெற்ற, 'உலகம் பலவிதம்' பாடல் தான் அவரை பிரபலப்படுத்தியது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.




