'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

'உத்தமப்புத்திரன்' படத்தில் 'ஹா... யாரடி நீ மோகினி' , மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்', 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' இந்த பாடல்களை யார் பாடியது என்று கேட்டால் 90 சதவிகிதம் பேர் பி.சுசீலா என்பார்கள், அல்லது வேறு பாடகியின் பெயரை சொல்வார்கள். பத்து சதவிகிதம் பேருக்குத்தான் பாடியது ஏ.பி.கோமளா என்பது தெரியும்.
1940களின் இறுதியில் ஆரம்பித்து 1970வரை கோமளாவின் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய மொழிகளில் ஒலித்தது. தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடி வந்த கோமளாவிற்கு 1949ம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்தில் இடம்பெற்ற, 'உலகம் பலவிதம்' பாடல் தான் அவரை பிரபலப்படுத்தியது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.




