நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

'உத்தமப்புத்திரன்' படத்தில் 'ஹா... யாரடி நீ மோகினி' , மாலையிட்ட மங்கை' படத்தில் 'நானன்றி யார் வருவார்', 'ராஜராஜனில்', 'நிலவோடு வான்முகில் விளையாடுதே', 'நான் பெற்ற செல்வ'த்தில் 'மாதா பிதா குரு தெய்வம்', 'தூக்குத் தூக்கி'யில் 'சுந்தரி செளந்தரி நிரந்தரியே' இந்த பாடல்களை யார் பாடியது என்று கேட்டால் 90 சதவிகிதம் பேர் பி.சுசீலா என்பார்கள், அல்லது வேறு பாடகியின் பெயரை சொல்வார்கள். பத்து சதவிகிதம் பேருக்குத்தான் பாடியது ஏ.பி.கோமளா என்பது தெரியும்.
1940களின் இறுதியில் ஆரம்பித்து 1970வரை கோமளாவின் குரல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னந்திய மொழிகளில் ஒலித்தது. தனது 11 வது வயதில் திரைப்படங்களுக்கு பின்னணி பாட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரங்களுக்கு பின்னணி பாடி வந்த கோமளாவிற்கு 1949ம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்தில் இடம்பெற்ற, 'உலகம் பலவிதம்' பாடல் தான் அவரை பிரபலப்படுத்தியது. அதை பாடியபோது கோமளாவின் வயது 13. இந்தப் பாடலின் பிரபலம் கோமளாவையும் சிறந்த பின்னணிப் பாடகி வரிசையில் சேர்த்தது.