மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இதில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில், தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்த போதும் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாகவும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார்.