ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர்' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கும் இதில் சிரஞ்சீவியும், நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முசோரியில் நடந்த நிலையில், தற்போது ஒரு காதல் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப பின்னணி கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். மேலும், இப்படத்தில் சிரஞ்சீவியும் நயன்தாராவும் திருமணமான தம்பதிகளாக நடித்த போதும் அவர்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும், தாங்கள் காதலித்த காலகட்டத்தை அவர்கள் நினைவு கூறும் இளமை ததும்பும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாகவும் இயக்குனர் அனில் ரவி புடி தெரிவித்துள்ளார்.