பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக ராஜா ராணி, மான் கராத்தே மூலம் மக்களிடையே பிரபலமானார். இது அல்லாமல் அவர் 'நெருப்பு டா', 'வரலாம் வரலாம் வா', 'கொடி பறக்குதா', செம வெயிட்டு' உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடினார். அதன் பின்னர் 'கனா', 'நெஞ்சுக்கு நீதி', 'லேபிள் வெப் தொடர்' போன்ற படைப்புகளை ஒரு இயக்குனராக தந்தார்.
கடந்தாண்டு வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது "அருண் ராஜ காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டு படம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
இதன் மூலம் கனா படத்திற்கு பிறகு மீண்டும் அருண் ராஜ காமராஜ் ஸ்போர்ட்ஸ் கதைக்களம் கொண்ட படத்தை கையில் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.