Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு

10 டிச, 2025 - 04:20 IST
எழுத்தின் அளவு:
Ban-on-release-of-VaaVaathiyaar-extended
Advertisement


ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‛‛ஏற்கனவே பலமுறை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. ‛கங்குவா, தங்கலான்' உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் வைப்பாகவும் நீதிமன்றத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது. தற்போது மீண்டும், கடனை செலுத்தாமல் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதுவரை 7 முறை கடனை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், டிசம்பர் 12ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ள ‛வா வாத்தியார்' படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிடக்கூடாது'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் வெளியாக இருந்த ‛வா வாத்தியார்' திரைப்படம் மேலும் தள்ளிப்போகிறது. ஏற்கனவே படம் முடிந்து 2 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரத்னகுமாரின் '29'ரத்னகுமாரின் '29' விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in