பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா |

போயாபதி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'அகண்டா 2' படம் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்திற்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் இடையேயான பணப் பரிமாற்ற பாக்கித் தொகை காரணமாக ஈராஸ் நிறுவனம் நீதிமன்றத் தடை உத்தரவை வாங்கியது. தெலுங்கின் சீனியர் டாப் ஹீரோவான பாலகிருஷ்ணா படம் நீதிமன்ற உத்தரவால் வெளியாகாமல் போனது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானாலும் அடுத்த நாளே படத்தை வெளியிட முயற்சித்தும் முடியவில்லை.
அதன்பின் இரண்டு நிறுவனங்களும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்பார்த்ததைப் போலவே நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு நீக்கத்தைப் பெற்றதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணிக்கு மேல் டிசம்பர் 12ல் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 11ம் தேதி படத்தின் பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.