பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தனுஷ் நடித்த பாலிவுட் படம் 'ராஞ்சனா'. 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தை ஈராஸ் மீடியா நிறுவனம் மறு வெளியீடு செய்ய இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இது படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. படத்தின் பலமே அதன் கிளைமாக்ஸ்தான் அதை வியாபாரத்திற்காக மாற்றுவதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் "படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்களிடம் உள்ளது. ஏ.ஐ. வசதி மூலமாக படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம். இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, கலையின் புதிய வடிவம். உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள் வழக்கம்தான். புதிய 'கிளைமேக்ஸ்' உடன் படம் வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.