ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நடிகை நயன்தாராவின் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று போலீஸ் டி.ஜி.பி.அலுவலதத்திற்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர். வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது. நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




