பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

சமீபத்தில் கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது நாட்டையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து நடிகை அம்பிகா நேற்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கரூர் வந்தேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை.
இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்த சாயமும் பூச வேண்டாம். நான் எந்த கட்சியை சார்ந்தும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.