பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |
சமீபத்தில் கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது நாட்டையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து நடிகை அம்பிகா நேற்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கரூர் வந்தேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை.
இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்த சாயமும் பூச வேண்டாம். நான் எந்த கட்சியை சார்ந்தும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.