ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

1950களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரானது. அதே நேரத்தில் பெங்காலி மொழி திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டது. பெங்காலி நாடகங்கள் தமிழ் சினிமா ஆனது. முதன் முறையாக தமிழ் மற்றும் பெங்காலியில் தயாரான 'ரத்னதீபம்', பெங்காலி டைட்டில் 'ரத்னதீப்'.
தீபகி போஸ் என்ற பெங்கலாலி இயக்குனர் இயக்கி, தயாரித்தார். அபி பட்டாச்சார்யா, அனுபமா, சன்யல், சாயாதேவி நடித்தனர். ரூபின் சட்டர்ஜி இசை அமைத்திருந்தனர்.
ஒரு பெரிய கோடீஸ்வர வீட்டின் வாரிசு திடீரென காணாமல் போகிறான். இதை தெரிந்து கொள்ளும் ஒருவன் தான்தான் காணாமல்போன வாரிசு என்று அந்த குடும்பத்திற்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் உண்மையை சொல்லிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதேபோன்ற கதை பின்னாளில் நிறைய படங்களில் வந்தது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.




