பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் |
1950களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரானது. அதே நேரத்தில் பெங்காலி மொழி திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டது. பெங்காலி நாடகங்கள் தமிழ் சினிமா ஆனது. முதன் முறையாக தமிழ் மற்றும் பெங்காலியில் தயாரான 'ரத்னதீபம்', பெங்காலி டைட்டில் 'ரத்னதீப்'.
தீபகி போஸ் என்ற பெங்கலாலி இயக்குனர் இயக்கி, தயாரித்தார். அபி பட்டாச்சார்யா, அனுபமா, சன்யல், சாயாதேவி நடித்தனர். ரூபின் சட்டர்ஜி இசை அமைத்திருந்தனர்.
ஒரு பெரிய கோடீஸ்வர வீட்டின் வாரிசு திடீரென காணாமல் போகிறான். இதை தெரிந்து கொள்ளும் ஒருவன் தான்தான் காணாமல்போன வாரிசு என்று அந்த குடும்பத்திற்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் உண்மையை சொல்லிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதேபோன்ற கதை பின்னாளில் நிறைய படங்களில் வந்தது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.