பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

தமிழ் ரசிகர்கள் அதிகம் அறிந்தவர் ராமநாதபுரத்து (கவுண்டமணி) செந்திலை. ஆனால் கோவை செந்திலை சில படங்களில் பார்த்த நினைவிருக்கலாம். 400 படங்களுக்கு மேல் நடித்தும் கடைசி காலத்தில் வறுமையில் வாடியவர் கோவை செந்தில்.
கோவை அருகேயுள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். இயற்பெயர் குமாரசாமி. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகம் ஒன்றை பார்த்த கே.பாக்யராஜ் அவருக்கு கோவை செந்தில் என்று பெயர் சூட்டி, 'ஒரு கை ஓசை' படத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பாக்யராஜ் அலுவலகத்திலேயே தங்கி இருந்து அவரது அனைத்து படங்களிலும் நடித்தார்.
பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களே இவருக்கு அமைந்தன. 'இது நம்ம ஆளு', 'பவுனு பவுனுதான்', 'அவசர போலீஸ் 100' போன்றவை கோவை செந்தில் நடித்த சில முக்கியமான படங்கள்.
சுமார் 400 படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில், ஆரம்பத்திலிருந்தே சென்னையில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது கோவை சென்று குடும்பத்தை சந்தித்து வருவார்.
ஒரு விபத்தில் சிக்கிய அவர் கவனிக்க ஆள் இன்றி குடும்பத்தோடு சென்றார். படங்களில் நடிக்காததால் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்த செந்தில் சில நடிகர்களின் உதவியால் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது 74வது வயதில் 2018ம் ஆண்டு காலமானார்.