ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

தமிழ் ரசிகர்கள் அதிகம் அறிந்தவர் ராமநாதபுரத்து (கவுண்டமணி) செந்திலை. ஆனால் கோவை செந்திலை சில படங்களில் பார்த்த நினைவிருக்கலாம். 400 படங்களுக்கு மேல் நடித்தும் கடைசி காலத்தில் வறுமையில் வாடியவர் கோவை செந்தில்.
கோவை அருகேயுள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். இயற்பெயர் குமாரசாமி. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகம் ஒன்றை பார்த்த கே.பாக்யராஜ் அவருக்கு கோவை செந்தில் என்று பெயர் சூட்டி, 'ஒரு கை ஓசை' படத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பாக்யராஜ் அலுவலகத்திலேயே தங்கி இருந்து அவரது அனைத்து படங்களிலும் நடித்தார்.
பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களே இவருக்கு அமைந்தன. 'இது நம்ம ஆளு', 'பவுனு பவுனுதான்', 'அவசர போலீஸ் 100' போன்றவை கோவை செந்தில் நடித்த சில முக்கியமான படங்கள்.
சுமார் 400 படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில், ஆரம்பத்திலிருந்தே சென்னையில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது கோவை சென்று குடும்பத்தை சந்தித்து வருவார்.
ஒரு விபத்தில் சிக்கிய அவர் கவனிக்க ஆள் இன்றி குடும்பத்தோடு சென்றார். படங்களில் நடிக்காததால் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்த செந்தில் சில நடிகர்களின் உதவியால் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது 74வது வயதில் 2018ம் ஆண்டு காலமானார்.