ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
தமிழ் ரசிகர்கள் அதிகம் அறிந்தவர் ராமநாதபுரத்து (கவுண்டமணி) செந்திலை. ஆனால் கோவை செந்திலை சில படங்களில் பார்த்த நினைவிருக்கலாம். 400 படங்களுக்கு மேல் நடித்தும் கடைசி காலத்தில் வறுமையில் வாடியவர் கோவை செந்தில்.
கோவை அருகேயுள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். இயற்பெயர் குமாரசாமி. சிறுவயதில் நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகம் ஒன்றை பார்த்த கே.பாக்யராஜ் அவருக்கு கோவை செந்தில் என்று பெயர் சூட்டி, 'ஒரு கை ஓசை' படத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பாக்யராஜ் அலுவலகத்திலேயே தங்கி இருந்து அவரது அனைத்து படங்களிலும் நடித்தார்.
பெரும்பாலும் பூசாரி மற்றும் பிச்சைக்காரர் வேடங்களே இவருக்கு அமைந்தன. 'இது நம்ம ஆளு', 'பவுனு பவுனுதான்', 'அவசர போலீஸ் 100' போன்றவை கோவை செந்தில் நடித்த சில முக்கியமான படங்கள்.
சுமார் 400 படங்கள் வரை நடித்திருக்கும் செந்தில், ஆரம்பத்திலிருந்தே சென்னையில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது கோவை சென்று குடும்பத்தை சந்தித்து வருவார்.
ஒரு விபத்தில் சிக்கிய அவர் கவனிக்க ஆள் இன்றி குடும்பத்தோடு சென்றார். படங்களில் நடிக்காததால் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்த செந்தில் சில நடிகர்களின் உதவியால் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது 74வது வயதில் 2018ம் ஆண்டு காலமானார்.