'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 29வது படம் 'தெனாலி ராமன்'. 1956ம் ஆண்டு வெளிவந்த படமாகும். பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் வெளிவந்தது. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் திரைப்படமாக்கினார்கள்.
தெனாலி ராமனாக சிவாஜி கணேசன், கிருஷ்ணதேவராயராக என். டி. ராமராவ், அப்பாஜியாக சித்தூர் வி. நாகையா, ராஜகுருவாக நம்பியார், ராமனின் மகனாக மாஸ்டர் வெங்கடேசுவர், கிருஷ்ணஸ்ரீயாக பானுமதி ராமகிருஷ்ணா, கமலாவாக ஜமுனா, ராதாவாக சுரபி பாலசரசுவதி திருமலாதேவியாக நடித்திருந்தார்கள்.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தமிழ் பதிப்பிற்கான திரைக்கதையை கண்ணதாசன் எழுதினார். தெலுங்கு பதிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழில் வெளியானது. இந்த படத்தின் வெளியீட்டின்போது ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. கண்ணதாசனும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இந்த படத்த்தின் போது சிவாஜி காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரசில் சேர்ந்தார்.
இதை விமர்சிக்கும் விதமாக கண்ணதாசன் தனது பத்திரிகையில் படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றான சிவாஜியை கழுத்து வரை புதைத்து யானை ஒன்று தன் காலால் அவர் தலையை நசுக்க முயல்கிற காட்சியை விளம்பரமாக வெளியிட்ட கண்ணதாசன் 'கணேசனின் எதிர்காலம்' என்று தலைப்பு கொடுத்திருந்தார்.
அதாவது காமராஜர் என்கிற பெரிய அரசியல் சக்தி சிவாஜி என்கிற கலைஞனை நசுக்கப்போகிறது என்பதாக இதன் பொருள். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக சிறிது காலம் கருத்து வேறுபாட்டுடன் இருந்த கண்ணதாசனும், சிவாஜியும் பின்னர் மீண்டும் இணைந்தனர்.