'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

வேலைவாய்ப்பு தருவதாக அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் தீவிரவாதிகளாக அங்கு மாற்றப்படுகிறார்கள் என்ற கதையுடன் வெளிவந்த 'கேரளா ஸ்டோரி' படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் படம் வெளியிடப்படவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு கொடுத்தது.
இந்த நிலையில் அடுத்து 'கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' என்ற படம் வெளியானது. இதில் இந்து பெண்களை காதல் என்ற போர்வையில் மயக்கி திருமணம் செய்து முஸ்லிமாக மாற்றுவது பற்றிய கதையாக உருவானது. முந்தைய படம் கேரளாவை மையப்படுத்தி இருந்தது. இந்த படம் ராஜஸ்தானை மையப்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கும் கடும் எதிர்ப்பு இருந்தது. வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் படம் தியேட்டர்களில் வெளியானது.
இந்த நிலையில் பெரிய போராட்டத்திற்கு பிறகு தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய மாநிலங்களில், அந்தந்த மொழிகளிலேயே படம் வெளியாகி இருப்பதால் படத்தை பார்க்க விரும்பியவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.