ஆர்பி சவுத்ரிக்கு கண்ணீர் மல்க விஜய் இறுதி அஞ்சலி : கதறி அழுத ஜீவாவிற்கு ஆறுதல் | தேவிஸ்ரீ பிரசாத்திற்கு ஜோடி மிருணாள் தாக்கூரா.? | மத்திய சென்சார் போர்ட் புதிய தலைவராக ஷஷி சேகர் நியமனம் | பிரான்ஸிற்கு செல்லும் வாரணாசி குழு | ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம் மே 22ல் ரிலீஸ் | சல்மான்கான் படத்தில் வில்லனாகும் பஹத் பாசில் | ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரி | ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ? | ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி | 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் |

தமிகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறி கொடுத்தது. அது மட்டுமல்ல ஸ்டாலின் கூட அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போகும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலினுக்கு யாருமே எந்தவிதமான ஆறுதல் பதிவுகளையும் எக்ஸ் தளத்தில் போடவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” எனப் பேசியுள்ளார்.
இவர்களது இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
தேர்தலுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
ஸ்டாலினுடனான ரஜினிகாந்த்தின் சந்திப்பு அவருடைய விஜய் எதிர்ப்பு நிலையை தொடர்வதாகவே காட்டுகிறது.




