காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்தவர், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக தனது படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் 'பேட்ரியாட்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் நிறைவு செய்தார் மம்முட்டி. அதுமட்டுமல்லாமல் சில படங்களில் நட்புக்காக கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் 'சத்தா பச்சா' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதை அடுத்து 'தொடரும்' படத்தில் வில்லனாக அறிமுகமாகி மிரட்டிய நடிகர் பிரகாஷ் வர்மா தற்போது ஹீரோவாக நடிக்க, பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்திலும் நட்புக்காக மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2004ல் மம்முட்டி நடித்த பிளாக் திரைப்படத்தில் அவர் கரிக்காமுரி சண்முகம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் கேமியோ ரோலில் தோன்றுகிறாராம் மம்முட்டி. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.




