ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. தற்போது டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
“ரொம்ப நாளா இங்க வரணும்னு ஆசை. கொஞ்ச நாளாவே இந்த கோயிலைப் பத்தி பேச்சுல வந்துக்கிட்டே இருந்தது. திடீர்னு முடிவெடுத்து இங்க தரிசனத்துக்கு வந்தேன். தரிசனம் ரொம்ப அழகா இருந்தது. இந்த இடம் பார்க்கிறதுக்கு ஆச்சரியமா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
கோவிலைச் சுற்றி வரும் போது கண்களில் கண்ணீருடனே நடந்து சென்றார். மேலும் அரசியல் குறித்து பேசுகையில், “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தானே. நான் பிரபலமாக இருக்கேன்னு அரசியலுக்கு வரக்கூடாது. ரசிகர்கள் நிறைய இருக்காங்கன்னு வரக்கூடாது. ரசிகர்கள் வேற நிஜ வாழ்க்கை வேற. மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சி வரணும், மிதப்பு இருக்கக் கூடாது. இறங்கி நடந்து போயி மக்களுக்காக வேலை செய்யணும்” என்றார்.




