ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அடுத்து அவரது 157வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதனை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வெங்கடேஷை வைத்து அனில் ரவிபுடி கடைசியாக 'சங்கராந்திக்கி வஸ்துனா' எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அதனால் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.