காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலுக்கு வந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை ஆந்திராவில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரோஜா அமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சிலர் டைம்பாசுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு, அடுத்த நாள் ஆன்மிக பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வர வேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள். அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.