22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலுக்கு வந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை ஆந்திராவில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரோஜா அமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சிலர் டைம்பாசுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு, அடுத்த நாள் ஆன்மிக பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வர வேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள். அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.