துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலுக்கு வந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை ஆந்திராவில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரோஜா அமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆந்திராவில் துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சிலர் டைம்பாசுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். ஒரு நாள் படப்பிடிப்பு, அடுத்த நாள் ஆன்மிக பயணம் என்று பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு நடிகர்கள் வருவதை நான் எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல எண்ணத்துடன் வர வேண்டும். நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி அதன் பிறகு காங்கிரஸில் இணைந்து விட்டார். இதனால் அவரை நம்பி வந்த கட்சி நிர்வாகிகளெல்லாம் ரோட்டில் நின்றார்கள். அதனால் நடிகர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பைட் பண்ண வேண்டும். கட்சியை இடையில் விட்டு விட்டு ஓடி விடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது'' என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.