நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் | கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான் |
கன்னட சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் பாவனா ராமண்ணா. தமிழில் அன்புள்ள காதலுக்கு, நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 40 வயதான பாவனா இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 40 வயதை நெருங்கியபோது, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தீவிரம் அடைந்தது. தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவு சாதாரணமாக நடக்கவில்லை. செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாத பெண் என்ற ஒரே காரணத்தை சொல்லி அனைவரும் என்னை நிராகரித்தனர். எனது விருப்பத்துக்கு தடை போட்டனர். தற்போது தடைகளை தாண்டி இரட்டை குழந்தைகளுக்கு அம்மா ஆகப்போகிறேன். என்கிறார் பாவனா.