அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த வருடம் அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. இந்த நிலையில், தமிழில் கடந்த 2018ல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வமில்லையா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலிப்பேன் என கூறியுள்ளார். மேலும் தெனிந்திய மொழிகளில் மலையாள படங்கள் தன்னை அதிகம் கவர்ந்துள்ளதாக கூறியுள்ள ஜான்வி, சமீபத்தில் ட்ரான்ஸ் என்கிற படத்தை பார்த்ததாகவும் அதில் பஹத் பாசிலின் நடிப்பு சூப்பராக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதனால் மலையாள படங்களில் நடிக்க தனி ஆர்வம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.