மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயின் வழியிலேயே நடிப்பில் இறங்கிவிட்டார். கடந்த வருடம் அவர் நடிப்பில் குஞ்சன் சக்சேனா என்கிற படம் வெளியானது. இந்த நிலையில், தமிழில் கடந்த 2018ல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வமில்லையா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், நல்ல வாய்ப்புகள் வந்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலிப்பேன் என கூறியுள்ளார். மேலும் தெனிந்திய மொழிகளில் மலையாள படங்கள் தன்னை அதிகம் கவர்ந்துள்ளதாக கூறியுள்ள ஜான்வி, சமீபத்தில் ட்ரான்ஸ் என்கிற படத்தை பார்த்ததாகவும் அதில் பஹத் பாசிலின் நடிப்பு சூப்பராக இருந்தது என்றும் கூறியுள்ளார். அதனால் மலையாள படங்களில் நடிக்க தனி ஆர்வம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.