சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கலந்த அரசியல் படமாக வெளியாகி கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அப்போதே பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி அறிவித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் லூசிபர் 2 எம்புரான் என்கிற பெயரில் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள்.
கடந்த சில வாரங்களாக லடாக் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மோகன்லால் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் லடாக்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். லூசிபரை தொடர்ந்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்த பிரித்விராஜ் இந்த எம்புரான் படம் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிடும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.