மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா |
தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பெங்களூரு ரசிகர்களோ, ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூருவில் உள்ள பிருந்தா தியேட்டரில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவில் மகேஷ் பாபுவின் மகனான கட்டமனேனி கவுதம் கிருஷ்ணாவின் 35 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் வைத்து அவருக்கு ஒரு விழா நடத்துகிறார்களாம். தற்போது மகேஷ் பாபுவின் மகன் அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பை படித்து வருவதோடு, தான் நடிக்கும் சில வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவார் என்றும் கூறப்படுகிறது.