சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் |

மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‛2018' என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். அந்த படத்தில் கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை தத்துரூபமாக படமாக்கி இருந்தார். எப்போதுமே ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் மழை சீசன் துவங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிக்கூடங்களை திறந்து விட்டு அதற்கு பதிலாக ஜூன், ஜூலை மாதங்களில் லீவு விடலாமா என பொதுமக்களிடம் ஒரு கருத்து கேட்பை முன் வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப் மற்றும் ‛ஒரு அடார் லவ்' படத்தின் இயக்குனர் ஓமர் லுலு, ஆகியோர் ‛‛ஏப்ரல் மே என்கிற சம்மர் சீசனை பள்ளி நாட்களாக வைக்கத் தேவையில்லை, அவை விடுமுறையாகவே இருக்கட்டும், அதற்கு பதிலாக ஜூன் ஜூலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாம் இல்லையென்றால் கொரோனா காலகட்டம் போல மாணவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பாடங்களை கற்பிக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்'' என்று ஆலோசனை கூறியுள்ளனர். அனேகமாக இந்த வருடம் இதுகுறித்து கேரள அரசு ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.