போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‛2018' என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். அந்த படத்தில் கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை தத்துரூபமாக படமாக்கி இருந்தார். எப்போதுமே ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் மழை சீசன் துவங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிக்கூடங்களை திறந்து விட்டு அதற்கு பதிலாக ஜூன், ஜூலை மாதங்களில் லீவு விடலாமா என பொதுமக்களிடம் ஒரு கருத்து கேட்பை முன் வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப் மற்றும் ‛ஒரு அடார் லவ்' படத்தின் இயக்குனர் ஓமர் லுலு, ஆகியோர் ‛‛ஏப்ரல் மே என்கிற சம்மர் சீசனை பள்ளி நாட்களாக வைக்கத் தேவையில்லை, அவை விடுமுறையாகவே இருக்கட்டும், அதற்கு பதிலாக ஜூன் ஜூலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாம் இல்லையென்றால் கொரோனா காலகட்டம் போல மாணவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பாடங்களை கற்பிக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்'' என்று ஆலோசனை கூறியுள்ளனர். அனேகமாக இந்த வருடம் இதுகுறித்து கேரள அரசு ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.