போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

40 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவையும் விட்டு ஒதுங்கியவர், கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் மறுபிரவேசம் செய்து அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடிகைகள் மீனா, ஷோபனா போன்றவர்கள் வயதான பின்னும் கூட மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிப்பது போல தானும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை சாந்தி கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. அதை சமீபத்திய பேட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்போதும் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நிவின்பாலி, பஹத் பாசில் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதாலோ என்னவோ மோகன்லால், மம்முட்டி ஆகியோர் என்னை கண்டு கொள்வதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.