பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

40 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவையும் விட்டு ஒதுங்கியவர், கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் மறுபிரவேசம் செய்து அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடிகைகள் மீனா, ஷோபனா போன்றவர்கள் வயதான பின்னும் கூட மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிப்பது போல தானும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை சாந்தி கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. அதை சமீபத்திய பேட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்போதும் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நிவின்பாலி, பஹத் பாசில் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதாலோ என்னவோ மோகன்லால், மம்முட்டி ஆகியோர் என்னை கண்டு கொள்வதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.