அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

40 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவையும் விட்டு ஒதுங்கியவர், கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் மறுபிரவேசம் செய்து அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடிகைகள் மீனா, ஷோபனா போன்றவர்கள் வயதான பின்னும் கூட மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிப்பது போல தானும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை சாந்தி கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. அதை சமீபத்திய பேட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்போதும் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நிவின்பாலி, பஹத் பாசில் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதாலோ என்னவோ மோகன்லால், மம்முட்டி ஆகியோர் என்னை கண்டு கொள்வதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.