தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” |
40 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவையும் விட்டு ஒதுங்கியவர், கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் மறுபிரவேசம் செய்து அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்தில் நடிகைகள் மீனா, ஷோபனா போன்றவர்கள் வயதான பின்னும் கூட மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு ஜோடியாக நடிப்பது போல தானும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை சாந்தி கிருஷ்ணாவுக்கு இருக்கிறது. அதை சமீபத்திய பேட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்போதும் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நிவின்பாலி, பஹத் பாசில் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டதாலோ என்னவோ மோகன்லால், மம்முட்டி ஆகியோர் என்னை கண்டு கொள்வதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.