சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன். திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் 2008ம் ஆண்டு 'தலப்பரவு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிட்டி ஆப் காட், மேரிக்குன்றொரு குஞ்சாடு, பாம்பே மார்ச், கரியஸ்தன், ஒன்வே டிக்கெட் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
35 வயதாகும் ரெஞ்சுஷா மேனன் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து திறந்தனர். அப்போது ரெஞ்சுஷா மேனன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து ஸ்ரீகாரியம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரெஞ்சுஷா மேனன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.. ரெஞ்சுஷா சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் கனவுடன் இருந்தார். அது நிறைவேறவில்லை. தொலைக்காட்சி தொடர்களிலும் பெரிய கேரக்டர்கள் கிடைக்கவில்லை. மேலும் சில வருடங்களாக பண நெருக்கடியிலும் இருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இது தவிர வேறு காரணம் ஏதும் இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.