'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

வாரிசு நடிகர்கள் என்பதால் எளிதாக வாய்ப்பை பெற்று விட்டார்கள் என்று ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் மலையாள திரை உலகில் அற்புதமான நடிகர்களாக பிரித்விராஜும் பஹத் பாசிலும் தென்னிந்திய அளவில், ஏன் பாலிவுட் வரை புகழ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் சமீபத்தில் தனது முதல் பட வாய்ப்பு குறித்து புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் 12ம் வகுப்பு முடித்த கையோடு சினிமாவில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற்றது. இயக்குனர் பாசில் இயக்கும் படத்திற்காக நடைபெற்ற அந்த ஆடிசனில பிரித்விராஜுக்கு ஜோடியாக நடிகை அசினும் தனது முதல் படமாக கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜ் அதில் செட் ஆகவில்லை என்று தனது மகன் பஹத் பாசிலை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாசில்.
ஆனால் அவருக்கு ஜோடியாக அசின் பொருந்தவில்லை என்று கூறி அவருக்கு பதிலாக நிகிதாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாசில். ஆனால் அதே வருடத்தில் நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் ரஞ்சித் டைரக்ஷனில் நந்தனம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதேபோல அதற்கு அடுத்த வருடமே நடிகை அசினும் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை என்கிற படத்தில், பல பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் டைரக்ஷனில் அறிமுகமானார். பின்னாளில் மூவருமே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றனர்.