தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பொதுவாக சோசியல் மீடியாவில் பிரபல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தான் அதிகமாக அவதூறு தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதை பெரும்பாலும் செய்வது ஆண்களாக தான் இருக்கும். ஆனால் ஆச்சரியமாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் மீது ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவதூறு தாக்குதல் வந்திருக்கிறார் என்பதும், அவர் ஒரு இளம்பெண் என்பதும் இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருக்கிறது. தற்போது அந்த பெண் யார் என்பது குறித்து புகைப்பட அடையாளத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார் சுப்ரியா மேனன்..
இது குறித்து சுப்ரியா கூறும்போது, “2018 முதல் என் மீது இந்த பெண் தொடர்ந்து அவதூறு தாக்குதல் நடத்தி வருகிறார். வெவ்வேறு போலியான கணக்குகளை துவங்கி இதை அவர் செய்து வந்தார். சில வருடங்களிலேயே அவரை நான் கண்டுபிடித்து விட்டாலும், இளம்பெண் என்பதால் அவரது எதிர்காலம் கருதி அமைதியாக இருந்தேன். தற்போது அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தையும் இருக்கிறது. நர்ஸ் ஆக வேலையும் பார்க்கிறார். இருந்தாலும் இப்போதும் என் மீதான அவரது அவதூறு தாக்குதல் நின்ற பாடில்லை” என்று கூறி அந்த பெண்ணின் சோசியல் மீடியா அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுப்ரியா மேனன். மேலும் இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.