நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
வாரிசு நடிகர்கள் என்பதால் எளிதாக வாய்ப்பை பெற்று விட்டார்கள் என்று ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் மலையாள திரை உலகில் அற்புதமான நடிகர்களாக பிரித்விராஜும் பஹத் பாசிலும் தென்னிந்திய அளவில், ஏன் பாலிவுட் வரை புகழ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் சமீபத்தில் தனது முதல் பட வாய்ப்பு குறித்து புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் 12ம் வகுப்பு முடித்த கையோடு சினிமாவில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற்றது. இயக்குனர் பாசில் இயக்கும் படத்திற்காக நடைபெற்ற அந்த ஆடிசனில பிரித்விராஜுக்கு ஜோடியாக நடிகை அசினும் தனது முதல் படமாக கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜ் அதில் செட் ஆகவில்லை என்று தனது மகன் பஹத் பாசிலை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாசில்.
ஆனால் அவருக்கு ஜோடியாக அசின் பொருந்தவில்லை என்று கூறி அவருக்கு பதிலாக நிகிதாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாசில். ஆனால் அதே வருடத்தில் நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் ரஞ்சித் டைரக்ஷனில் நந்தனம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதேபோல அதற்கு அடுத்த வருடமே நடிகை அசினும் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை என்கிற படத்தில், பல பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் டைரக்ஷனில் அறிமுகமானார். பின்னாளில் மூவருமே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றனர்.