அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் |

கடந்த மாதம் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட லோகா சாப்டர் 1 : சந்திரா என்கிற திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். டொமினிக் அருண் இயக்கினார். இதில் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் நடிகை சாந்தி பாலச்சந்திரன். 270 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழில் விக்ரம் நடித் காசி, என் மன வானில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினயன் இந்த படம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, “என் மூளையில் உருவாகி இருந்த ஒரு கதையை திருடி இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. தானும் இது போன்ற கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் லோகா படக்குழுவினர் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பு மிக சிறப்பு'' என்று பாராட்டியுள்ளார் வினயன்.




