இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை |

தங்கமணி என்பவர் இயக்க புதுமுகங்கள் நடிக்கும் பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் மூத்த நடிகை லதா. சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகம் ஆனேன். கடந்த 52 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு உட்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இப்போது நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது அவர் பாடிய கடைசி பாடல். அவர் சொன்னதால் தான் இந்த கேரக்டரில் நடித்தேன். குளிரில் சரியான உடை கிடைக்காமல், பாடல் காட்சியில் தவித்ததாக ஹீரோ சொன்னார். எனக்கும் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. என்.டி.ராமாராவ் படத்தில் நடித்தபோது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு உடை செட்டாகவில்லை. அந்த கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த காலத்தில் படங்கள் தியேட்டரில் ஓடின. 200 நாட்கள் வரை ஓடின. இப்போது செல்போனில் ஓடுகின்றன. அதில்தான் அதிகம் பார்க்கிறார்கள்'' என்றார்.