பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தங்கமணி என்பவர் இயக்க புதுமுகங்கள் நடிக்கும் பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் மூத்த நடிகை லதா. சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகம் ஆனேன். கடந்த 52 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு உட்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இப்போது நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது அவர் பாடிய கடைசி பாடல். அவர் சொன்னதால் தான் இந்த கேரக்டரில் நடித்தேன். குளிரில் சரியான உடை கிடைக்காமல், பாடல் காட்சியில் தவித்ததாக ஹீரோ சொன்னார். எனக்கும் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. என்.டி.ராமாராவ் படத்தில் நடித்தபோது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு உடை செட்டாகவில்லை. அந்த கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த காலத்தில் படங்கள் தியேட்டரில் ஓடின. 200 நாட்கள் வரை ஓடின. இப்போது செல்போனில் ஓடுகின்றன. அதில்தான் அதிகம் பார்க்கிறார்கள்'' என்றார்.