அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
தங்கமணி என்பவர் இயக்க புதுமுகங்கள் நடிக்கும் பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்துள்ளார் மூத்த நடிகை லதா. சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில் ''உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகம் ஆனேன். கடந்த 52 ஆண்டுகள், தமிழ், தெலுங்கு உட்பட 250க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இப்போது நல்ல கதைகள் கிடைத்தால் நடிக்கிறேன். பேராண்டி படத்தில் பாட்டியாக நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அது அவர் பாடிய கடைசி பாடல். அவர் சொன்னதால் தான் இந்த கேரக்டரில் நடித்தேன். குளிரில் சரியான உடை கிடைக்காமல், பாடல் காட்சியில் தவித்ததாக ஹீரோ சொன்னார். எனக்கும் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்து இருக்கின்றன. என்.டி.ராமாராவ் படத்தில் நடித்தபோது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. எனக்கு உடை செட்டாகவில்லை. அந்த கடும் குளிரில் கஷ்டப்பட்டு நடித்தேன். அந்த காலத்தில் படங்கள் தியேட்டரில் ஓடின. 200 நாட்கள் வரை ஓடின. இப்போது செல்போனில் ஓடுகின்றன. அதில்தான் அதிகம் பார்க்கிறார்கள்'' என்றார்.