9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தபோது அவர் இயக்கிய பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஆனால் அவர் இயக்குனரான பிறகு பிறர் கதைகளுக்கு திரைக்கதை எழுதியதில்லை. சில படங்களுக்கு வசனம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உதவியாளராக இருந்த ஆர்.கோவிந்தராஜ் என்பவர் 'கண்ண தொறக்கணும் சாமி' என்ற படத்தை இயக்கினார். முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற பாடலே தலைப்பாக வைக்கப்பட்டது. இந்த படத்தின் கதை 'நானும் மா ஆவிடா' என்ற தெலுங்கு படத்தின் கதையை தழுவியது. இந்த கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை எழுதிக் கொடுத்தார் கே.பாக்யராஜ்.
தன் உதவியாளர் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்தார். இந்த படம் வரவேற்பை பெற்றாலும் கோவிந்தராஜ் அதன் பிறகு ஏனோ படம் இயக்கவில்லை.
இந்த படத்தில் சிவகுமார், ஜீவிதா, சோ, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், இளையராஜாவும், கங்கை அமரனும் இணைந்து இசை அமைத்திருந்தார்கள்.