எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

சென்னையில் நடந்த 'ஆறு அறிவு' படவிழாவில் பேசியவர்கள், ஒரு காலத்தில் அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துகிற வாய்ப்பு கே.பாக்யராஜ்க்கு வந்தது என்ற ரீதியில் பேசினார்கள. அதற்கு மேடையிலே அவர் விளக்கம் அளித்தார்.
''எம்ஜிஆர் மறைந்தவுடன் ஆர்எம்வி தலைமையில் கட்சி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று சில மூத்த த லைவர்கள் என்னிடம் வந்து பேசினார்கள். அதற்கு நீங்க குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள். இப்போதுதான் எம்ஜிஆர் மறைந்து இருக்கிறார். சில நாட்களில் இப்படி பேசுவது சரியல்லை என்றேன். அடுத்து சிலர் வந்து ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நீங்க பேச வேண்டும் என்கிறார்கள். அவர்களிடமும் அதே பதிலை சொன்னேன்.
மேலும் இப்போதைய நிலையில் எம்ஜிஆர் மனைவி ஜானகி தலைமை ஏற்கட்டும். பின்னர் பொதுக்குழுவில் யாருக்கு ஆதரவு இருக்கிறதோ, அவர்கள் வசம் கட்சி போகட்டும் என்றேன். மற்றபடி நான் அதிமுகவை நடத்த நினைக்கவில்லை.
சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில் தவறான கருத்துகள் பரவ வேண்டாம்'' என்றார் பாக்யராஜ்.




