'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

ஹிந்தியில் ஆதித்யதார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள படம் 'துரந்தர்'. அவருடன் சாரா அர்ஜுன், சஞ்சய்தத், அக்ஷய் கண்ணா, மாதவன், ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 218 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்தப் படம் பாகிஸ்தானில் ஆபரேஷன் லியாரின் மற்றும் இந்திய உளவுத்துறையான ரா மேற்கொண்ட ரகசிய பணிகளை அடிப்படையாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கதையில் உருவாகி இருப்பதாக கூறி, சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், கத்தார் போன்ற நாடுகளில் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளார்கள். என்றாலும் இப்படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸில் இந்த துரந்தர் படத்தை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், படக்குழுவை பாராட்டி ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், 'துரந்தர் படத்தில் நடிகர்களின் வலுவான நடிப்பு, திடமான தொழில்நுட்பம் ஆகியவை பெரிய அளவில் உள்ளது. இப்படத்தின் இசையும் மிகச் சிறப்பாக உள்ளது. ரன்வீர் சிங் மட்டுமின்றி அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றும் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.