'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரது தனிப்பட்ட ஆளுமை உரிமைகளை வணிக ரீதியாக சிலர் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஏஐ மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் என உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்கள், யுடியூப், ரீல்ஸ் எனப் பயன்படுத்துகிறார்கள்.
தங்களது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் நீதிமன்றத்தை அணுகி மற்றவர்களின் வணிக பயன்பாட்டுக்குத் தடை வாங்குகிறார்கள். இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இளையராஜா ஆகியோர் இப்படி பெற்றுள்ளார்கள். அவர்களது வரிசையில் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவருக்கான ஆளுமை உரிமைகளைப் பெறுவதற்கான வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்த வரம்பு மீறல் 'லின்க்'குகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 22ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




