ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
1953ம் ஆண்டு வெளிவந்த படம் 'பணக்காரி', கே.எஸ்.கோபாலகிருணன் இயக்கிய இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர், வி. நாகையா, 'ஜாவர்ட்' சீதாராமன், டி.ஆர். ராஜகுமாரி, சி.வி.வி. பந்துலு, டி.எஸ்.துரைராஜ், கே.ஆர். செல்லம், டி.எஸ்.ஜெயா மற்றும் கே.ஏ.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்தனர்.
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய 'அன்னா கரெனினா' என்ற நாவலை தழுவி இந்தப் படம் உருவானது. பணக்கார பெண் ஒருத்தி திருமணமான நிலையில் கணவனை தவிர்த்து இன்னொரு ஆணுடன் நட்பாக பழகுவதால் குடும்பத்திற்குள் வரும் பிரச்னைகளை பேசிய படம். இந்த படத்தில் பணக்கார பெண்ணாக டி.ஆர்.ராஜகுமாரியும், அவரது கணவராக நாகய்யாவும், அவர் நட்பாக பழுகும் ராணுவ அதிகாரியாக எம்ஜிஆரும் நடித்தனர். ஒருவனின் மனைவி இன்னொரு ஆணுடன் பழகக்கூடாது என்று கருத்து அப்போது வலுவாக இருந்ததால் படம் பெரிய தோல்வியை தழுவியது.
இந்த படம் வெளிவருதற்கு முன்பு 'ஜீவிதநுகா' என்ற மலையாள படம் தமிழில் 'பிச்சைக்காரி' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. கே.வேம்பு இயக்கிய இந்த படத்தில் திக்குரிச்சி சுகுமாறன் நாயரும், பி.எஸ்.சரோஜாவும் நடித்திருந்தனர். இந்த படம் தமிழிலும் வெற்றி பெற்றது.
இதனால் சினிமா வியாபார வட்டத்தில் 'பணக்காரியை வாங்கிய விநியோகஸ்தர்கள் பிச்சைக்காரர் ஆனார்கள். பிச்சைக்காரியை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணக்காரர் ஆனார்கள்' என்ற விமர்சன வாசகம் இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது.