நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
பழம்பெரும் தமிழ் நடிகை புஷ்பலதா. இவரது பூர்வீகம் ஆந்திரபிரதேசம். ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இவரது குடும்பம் வசித்து வந்தது. பின்னர் சென்னைக்கு மாறியது. இயற்கையிலேயே அழகான புஷ்பலதாவிற்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. இந்த தேடலின் காரணமாக முதலில் 'செரபுக்கு சேவடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் 'செங்கோட்டை சிங்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து யாருக்கு சொந்தம், நானும் ஒரு பெண், சிம்லா ஸ்பெஷல், கற்பூரம் , பார் மகளே பார், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, புது வெள்ளம், சாரதா, ஜீவனாம்சம், தரிசனம், தாயே உனக்காக போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இத்துடன் பல தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
'நானும் ஒரு பெண்' படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்கள். பிறப்பால் கிறிஸ்தவரான புஷ்பலதா கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்ந்தார். ஏவிஎம்.ராஜன் இந்துவாக வாழ்ந்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்தார்கள். இதனால் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது. மகள் மகாலட்சுமியை நடிகையாக்க விரும்பினார். அந்த கனவும் நடக்கவில்லை. இப்படி வாழ்க்கையில் தோல்வி, பொருளாதார சிக்கல் என பிரச்னைகளை சந்தித்தனர். இந்தச்சூழலில் தனது கணவரையும், மகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார் புஷ்பலதா.
பின்னர் கணவன், மனைவி இருவரும் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு கிறிஸ்தவ மதபோதகர் ஆனார்கள். இருவருமே புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்கள் என்பதால் இவர்கள் பிரசங்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் திரண்டனர். உலக நாடுகள் முழுவதும் சுற்றினார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தார்கள். நடிகை புஷ்பலதா வயதுமூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.