மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் |

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் 2012ல் தேசிய விருதுகளை பெற்ற தட்டத்தின் மறயத்து என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என கொஞ்ச நாட்கள் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும் ரசிகர்களை ஆச்சரியப்படும் விதமாக தற்போது கேரள கலையான களறி பயிற்று கலையை கற்று வருகிறார் இஷா தல்வார்.
கேரளாவில் உள்ள பிரபல களரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ஒரு புதிய கலையை கற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவா அல்லது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காகவா என்பது பற்றிய விவரம் எதுவும் அவரிடமிருந்து வெளியாகவில்லை.