4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் 2012ல் தேசிய விருதுகளை பெற்ற தட்டத்தின் மறயத்து என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என கொஞ்ச நாட்கள் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும் ரசிகர்களை ஆச்சரியப்படும் விதமாக தற்போது கேரள கலையான களறி பயிற்று கலையை கற்று வருகிறார் இஷா தல்வார்.
கேரளாவில் உள்ள பிரபல களரி பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து களரி பயிற்சி எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது ஒரு புதிய கலையை கற்றுக் கொள்ளலாம் என்பதற்காகவா அல்லது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்காகவா என்பது பற்றிய விவரம் எதுவும் அவரிடமிருந்து வெளியாகவில்லை.




