லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் ‛சிதாரே ஜமீன் பர்'. ஆர்.எஸ் பிரசன்னா என்பவர் இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதுடன் வியாபார ரீதியாகவும் ஓரளவு வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்ல, முதல் முறையாக இந்த படம் மூலம் அமீர்கான் தனது படத்தை ஓடிடிக்கு கொடுக்காமல் நேரடியாக யு டியூப்பிலேயே பார்க்கும் விதமாக பதிவேற்றியுள்ளார். நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி இதை ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
அதேபோல கிராமங்கள் பக்கம் கூட திரையரங்குகள் அதிகம் இல்லை என்பதும், இது போன்ற படங்கள் அங்குள்ள மக்களை சென்றடைவதில்லை என்பதும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குஜராத்தில் உள்ள கொட்டாய் என்கிற கிராமத்திற்கு சென்று அங்குள்ள கிராமத்து மக்களுக்கு தற்காலிக திரை கட்டி இந்த படத்தை திரையிட்டு காட்டியுள்ளார் அமீர்கான்.
அந்த மக்களுடன் அமீர்கானும் சேர்ந்து படம் பார்த்துள்ளார். இது கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அமீர்கான் நடிப்பில் உருவான ‛லகான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமமாகும். அந்த ஞாபகார்த்தம் காரணமாக இந்த கிராமத்து மக்களுக்கு தனது படத்தை இப்படி திரையிட்டுள்ளார் அமீர்கான். இதற்கு பார்வையாளர்களிடம் 100 ரூபாய் என்கிற குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமீர்கான் கூறும்போது, “லகான் படம், அந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் என் நினைவில் எப்போதுமே பசுமையாக இருக்கும். அந்த மக்களுக்கு இந்த படம் சென்று சேர வேண்டும். கிராமத்து பகுதிகளில் மக்கள் படம் பார்க்கும் வகையில் திரையரங்குகள் உருவாக வேண்டும் என்று தான் இந்த படத்தை திரையிட்டு காட்டினேன். அரசு செயல்படுத்தியுள்ள யுபிஐ (ஜி பே) திட்டம் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.