பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட தாதா சாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு இயக்குனர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி ஆகியோருக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் தாதா சாகேப் பால்கே படம் உருவாகிறது என தகவல் வெளியானது. அதேசமயத்தில் ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து 'தாதா சாகேப் பால்கே' வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்தக் கதையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் இணைந்து தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை படத்தை அக்டோபரில் துவங்குவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் திரைக்கதை அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் அமையவில்லையாம். இதனால் இந்த படத்தை கைவிட ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் தற்போது ராஜமவுலிக்கு போட்டியில்லாமல் தாதா சாகேப் பால்கே படத்தை உருவாக்க வாய்ப்பு வந்துள்ளது என்கிறார்கள்.




