ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பலரும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்துக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி, ''அயோத்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி, அதேசமயம் பார்க்கிங் தரமான படம், விருதுக்கு உரிய படம். அதற்காக விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். அயோத்தி படம் விருது பட்டியலில் இருந்தது. ஆனால், அடுத்த கட்ட தேர்வுகளில் அது நகரவில்லை. அதனால் விருது கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே விருது ஜூரியாக இருந்தார். டில்லியிலும் மற்ற மொழி ஜூரி ஆதிக்கம். அதனால், இந்தமுறை 4 விருது கிடைத்ததே பெரிய விஷயம். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கருக்கு போராடிதான் சிறந்த துணை நடிகர் விருது வாங்கியுள்ளனர் என தகவல் வருகிறது.