தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பலரும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்துக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி, ''அயோத்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி, அதேசமயம் பார்க்கிங் தரமான படம், விருதுக்கு உரிய படம். அதற்காக விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். அயோத்தி படம் விருது பட்டியலில் இருந்தது. ஆனால், அடுத்த கட்ட தேர்வுகளில் அது நகரவில்லை. அதனால் விருது கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே விருது ஜூரியாக இருந்தார். டில்லியிலும் மற்ற மொழி ஜூரி ஆதிக்கம். அதனால், இந்தமுறை 4 விருது கிடைத்ததே பெரிய விஷயம். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கருக்கு போராடிதான் சிறந்த துணை நடிகர் விருது வாங்கியுள்ளனர் என தகவல் வருகிறது.