பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

'புஷ்பா 2' படம் மூலம் பான் இந்தியா நடிகராகப் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவரை சந்திக்க வேண்டுமென்றால் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என 42 கண்டிஷன்களை அவரது குழுவினர் கொடுப்பார்கள் என காவேரி பரூவா என்ற பெண் விளம்பர ஆய்வாளர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.
அல்லு அர்ஜுனை சந்திக்கும் போது அவரது கண்களைப் பார்த்து பேசக் கூடாது, கை குலுக்கக் கூடாது உள்ளிட்டவை அந்த 42 கண்டிஷன்களில் உள்ளவை என பேசியிருந்தார். இந்த வீடியோ மிகுந்த சர்ச்சையை நேற்று சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியது. பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூற ஆரம்பித்தனர்.
அதையடுத்து அல்லு அர்ஜுன் குழு அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டது. அதில், “அல்லு அர்ஜுன் பற்றிய சமீபத்திய சில கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, உண்மையற்றவை ஆகும். அவர் எப்போதும் அதிகபட்ச கண்ணியத்துடனும் கவுரவத்துடனும் தன்னை நடத்திக் கொண்டுள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாகக் கருதுகிறோம். எங்கள் சட்டக் குழு பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதிலிருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கை வந்த பின் காவேரி பரூவாவைப் பேட்டியெடுத்த யு டியூபர் ஸ்வீக்ரித்தி, தனக்கு பேட்டி தந்த விருந்தினர் மீது பி.ஆர். குழுவும், பாட் கணக்குகள் தாக்குதல் நடத்துவதால் அந்த வீடியோவை நீக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




