ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கடந்த 2012ம் ஆண்டு தனது கல்லூரி காதலியான உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் உபாசனா. அதோடு பத்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், நாங்கள் விரும்பும் போது நான் தாயாக மாறுவதை தேர்ந்தெடுத்ததில் உற்சாகமாக இருக்கிறேன், பெருமைப்படுகிறேன்.
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற உள்ளோம். எங்கள் குழந்தைகளை நாங்களே கவனித்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன். இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு. குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் இந்த சமூகத்தில் இருந்தோ எங்கள் குடும்பத்தில் இருந்தோ யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. இது எங்களுடைய உறவு மற்றும் எங்களுடைய வாழ்க்கை என்பதால் நாங்களே அனைத்து விஷயங்களிலும் முடிவெடுத்தோம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது ராம்சரண்- உபாசனா தம்பதியினர் அமெரிக்கா சென்று நிலையில் அவர்கள் குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்கும் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து உபாசனா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், எங்களுடைய குழந்தை இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையில் பிறக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.