ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
இதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், உலகின் முதல் 'வில்வித்தை பிரிமியர் லீக்' போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்காக பிரதமரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''அனில் காமினேனி தலைமையிலான உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக்கின் வெற்றி குறித்து நமது பிரதமர் மோடியை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். வில்வித்தையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதற்கும் இது எங்கள் சிறிய படியாகும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள், இந்த அற்புதமான விளையாட்டில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பிரதமருக்கு திருப்பதி வெங்கடாஜலபதியின் சிலையை பரிசாக வழங்கினார் ராம்சரண்.




