100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

சென்னையில் நடைபெற்ற லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு லைவ் கான்சர்ட் நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நடிகர் ராம்சரண் மற்றும் நடிகை ஜான்வி கபூர் இருவரும் கலந்து கொண்டு மேடை ஏறினார்கள். இதில் முதல் முறையாக ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்திற்கு முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து 'சிக்ரி சிக்ரி' என்கிற லிரிக்கல் வீடியோ வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ராம்சரணும் நாயகியான ஜான்வி கபூரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான சிக்ரி பாடலையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. அது பெத்தி படம் மூலமாக நிறைவேறிவிட்டது” என்று கூறினார். இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கி வரும் இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.




