தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சென்னையில் நடைபெற்ற லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு லைவ் கான்சர்ட் நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நடிகர் ராம்சரண் மற்றும் நடிகை ஜான்வி கபூர் இருவரும் கலந்து கொண்டு மேடை ஏறினார்கள். இதில் முதல் முறையாக ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' படத்திற்கு முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து 'சிக்ரி சிக்ரி' என்கிற லிரிக்கல் வீடியோ வெளியாகி அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ராம்சரணும் நாயகியான ஜான்வி கபூரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான சிக்ரி பாடலையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. அது பெத்தி படம் மூலமாக நிறைவேறிவிட்டது” என்று கூறினார். இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கி வரும் இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது.