நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. குறிப்பாக இதற்கு முன்பு, தான் நடித்த 'பாட்ஷா, சந்திரமுகி' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் கூட நடிக்க மறுத்த ரஜினி, இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர்-2 படப்பிடிப்பின்போது மீண்டும் ரஜினி இடத்தில் ஒரு கதை சொல்லி இருக்கிறாராம் நெல்சன். அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து விட்டதாம். அதனால் ஜெயிலர்-2வுக்கு பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.