ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்தவாரம் பத்து தல, தசரா என ராவணனின் கதாபாத்திர அம்சம் கொண்ட படங்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் ராவணாசுரா என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகியுள்ளது. சுதீர் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், பரியா அப்துல்லா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட ஐந்து கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் ஜெயராம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஏப்-7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் கிரிமினல் லாயராக நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார் ரவிதேஜா. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் ஜெயராம் பேசுகின்ற “இவன் கிரிமினல் லாயர் அல்ல.. லா தெரிஞ்ச கிரிமினல்” என்கிற வசனத்துக்கு ஏற்ப ரவி தேஜாவின் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் என இரண்டும் கலந்த அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு தற்போது 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் யு/ஏ சான்றிதழை தான் அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் படத்தில் அதிகம் வன்முறை காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் இடம்பெற்று இருப்பதால் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரவிதேஜா படத்திற்கு குழந்தைகளும் ரசிகர்கள் என்பதால் இந்த படத்திற்கு குடும்பத்தினர் குழந்தைகளையும் அழைத்து வந்து படம் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாம்.